ராசி மண்டலத்தில் மூன்றாவதாக வீற்றிருக்கும் செவ்வாய் கிரகமானது ஆற்றல், வீரியம், செயல் திறன் மற்றும் படைப்புத் திறன் போன்றவற்றைக் குறிக்கிறது. செவ்வாய் ஒருவருடைய ராசி மண்டலத்தில் நுழையும்போது அது சில தைரியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதுவே ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்திருக்கும் விதத்தைப் பொருத்து, அவருடைய வாழ்க்கையை நேர்மறையாக அல்லது எதிர்மறையாக மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றது செவ்வாய் கிரகம். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தினால் அனைத்து ராசியினருக்கும் சின்னச்சின்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சில ராசியினருக்கும் குறைந்த பாதிப்புகளையும் சிலருக்கு சற்று அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தவும் கூடும்.
இந்த இடப்பெயர்ச்சியினால் உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.