இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் என்ன சொல்கிறார்

டெல்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (பிஐபி) உறுதி செய்துள்ளது.


டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கியதாக கண்டுபிடிக்கப்பட்ட நபர் இத்தாலியில் இருந்து பயணம் செய்து வந்தவர். தெலங்கானாவில் நோய் உறுதி செய்யப்பட்டவர் துபாயில் இருந்து பயணம் செய்து வந்துள்ளார். இவரது பயண விவரங்கள் மேற்கொண்டு ஆராயப்படுகின்றன.